ரசாயனங்கள் இல்லாத உணவுகள்.. கற்றுத் தரும் “கியூபா”…

கியூபா” (CUBA) நாடு ஒரு வகையில் உலகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது.
 
அது எதில்….?
 
ரசாயனங்கள் இல்லாத உணவுகள்.. கற்றுத் தரும் “கியூபா”…
organic-cuba-urban

Organic Cuba

கியூபா… இது அமெரிக்காவின் அருகில் இருக்கும் சின்னஞ்சிறிய நாடு என்பதும், கம்யூனிச ஆட்சியின் கீழ் இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். கியூபா தான் ரசாயன உரமில்லாத இயற்கை வழி வேளாண்மையின் முன்னோடி நாடு என்று தெரியுமா….?

 
‘உலகின் சர்க்கரைக் கிண்ணம்’ என்பார்கள் கியூபாவை…! கரும்பை மட்டுமே முக்கியப் பயிராகக் கொண்ட கியூபா, 1959ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் நிகழ்ந்த புரட்சியின் மூலம் கம்யூனிச நாடாக மாறியது. அருகிலிருக்கும் அமெரிக்காவிற்கு, மிகச்சிறிய நாடான கியூபாவின் மாற்றம் பிடிக்கவில்லை. அமெரிக்கக் கண்டத்தில் ஒரு கம்யூனிச நாடு செழித்து வளர்ந்தால், அது அருகில் இருக்கும் மற்ற நாடுகளுக்கும் பரவும் என்பது அமெரிக்காவின் பயம். அதனால் உலக நாடுகள் பலவற்றோடு இணைந்து, கியூபா மீது பொருளாதாரத் தடையை விதித்தது அமெரிக்கா.
File photo of Cuban President Castro attending May Day parade in Revolution Square

ஃபிடல் காஸ்ட்ரோ

கரும்பு மட்டுமே விளையும் கியூபாவுக்கு உணவு உட்பட எல்லா அத்தியாவசியப் பொருட்களும் பிற நாடுகளிடமிருந்து தான் வர வேண்டும். இந்நிலையில் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை கடும் சிக்கலை கியூபாவிற்கு ஏற்படுத்தியது. அப்போது சோவியத் ரஷ்யா கியூபாவிற்கு உதவ முன் வந்தது. கியூபாவின் சர்க்கரையைப் பெற்றுக் கொண்டு, கியூபாவிற்குத் தேவையான உணவுப் பொருட்களையும், இதர அத்தியாவசியப் பொருட்களையும் ரஷ்யா அனுப்பி வைத்தது. அன்றைய கியூபாவின் உணவுத் தேவையில் அறுபது சதவீதம் ரஷ்யாவில் இருந்தே வந்தன. கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கிய கியூபா, அதற்குத் தேவையான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், டீசல், வேளாண் எந்திரங்கள்… இப்படி அனைத்தையும் ரஷ்யாவிடமிருந்தே பெற்றது.
 
நவீன வேளாண் முறையில் உணவு உற்பத்தியைத்துவங்கிய கியூபாவில் ஓர் ஆண்டிற்கு 13 லட்சம் டன் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன. சுமார் 90,000 டிராக்டர்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. ஒற்றைப் பயிர் சாகுபடியில் கியூபா முன்னிலையில்இருந்தாலும் கூட, பல்வேறு சூழலியல் பிரச்னைகளை எதிர்கொண்டது.
 
ரசாயன வேளாண்மையின் பல்வேறு தீங்குகளையும் கியூபா சந்தித்தது. நிலங்கள் படிப்படியாக உற்பத்தித்திறனை இழந்தன. தொழிற்சாலைகளைப் போல விவசாயம் நகர் மயமானதில் கிராமம் சார்ந்த பல தொழில்கள் நசிவைச் சந்தித்தன.
 
விளைவு…
 
கிராம மக்கள் நம் நாட்டைப் போலவே நகரங்களை நோக்கிப் பயணித்தார்கள். 1956ம் ஆண்டின் புள்ளி விவரப்படி கியூபாவில் கிராமங்களில் வசித்தவர்கள் அதன் மொத்த மக்கள் தொகையில் 56%. ஆனால் 1989ம் ஆண்டு புள்ளிவிவரப்படி கிராமங்களில் வசிப்போர் எண்ணிக்கை 28 சதவீதமாகக் குறைந்தது. இந்தச் சூழலில் தான் சோவியத் ரஷ்யா சிதறுண்டது. கியூபா தன் தேவைகளுக்காக சார்ந்திருந்த ரஷ்யாவின் உதவிகள் கிடைக்கவில்லை. நவீன விவசாயத்தை சுய சார்போடு செய்ய முடியாத சூழலில் டீசல் உட்பட பல பொருட்களின் தேவை இருந்தது. தயாரான சர்க்கரையை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. உணவுப்பொருட்கள், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் எதையும் வெளிநாடுகளிலிருந்து வாங்க முடியாத சூழலில், ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தார்.
 
அதன் படி, கரும்பு மட்டுமே விளைவிப்பது என்ற ஒற்றைப் பயிர் சாகுபடி முறையைக் கை விட்டது கியூபா. தங்களுக்குத் தேவையான எல்லா உணவுப் பொருட்களையும் தங்கள் மண்ணிலேயே உற்பத்தி செய்யும் முடிவிற்கு வந்தார் ஃபிடல். நாடு முழுவதும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் உரங்கள் இயற்கை வழி வேளாண் முறையில் தயாரிக்கப்பட்டன. குடும்பத் தோட்டங்கள், நகர்ப்புற விவசாயம் என அனைத்து வகைகளிலும் தற்சார்பு வேளாண்மைக்குத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. கியூப மக்களின் முக்கியமான உணவுகளில் ஒன்று, அரிசி. இயற்கை வழி வேளாண்மை துவங்கப்பட்ட ஒரே ஆண்டில், கியூபாவின் ஒட்டு மொத்த தேவையில் ஐம்பது சதவீத நெல் அங்கேயே விளைந்து செழித்தது. கிழங்கு உற்பத்தியில் தென்அமெரிக்காவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது கியூபா.
கியூபாவின் மொத்த மக்கள் தொகையில் 95% கல்வி கற்றவர்கள். அவர்கள் செய்த விவசாயத்தில் தான் கியூபாவின் உணவுத்தேவை நிறைவேறத் துவங்கியது. கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புற காலியிடங்கள் எல்லாம் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்தமான காலி இடங்கள் எல்லாம் விவசாய நிலங்களாக மாறின. 1.1 கோடி மக்கள் தொகையைக் கொண்ட கியூபாவின் குடிமக்கள் அனைவரும், தங்கள் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கான சுய போராட்டத்தை தாங்களே நடத்தினார்கள்.
 
வீடுகளில் இருக்கும் குறைந்த இடங்களில் காய்கறி பயிரிட்டார்கள். மாடித்தோட்டம் மூலம் தங்கள் தேவையையும் நிறைவேற்றி, எஞ்சியவற்றை விற்கத் துவங்கினார்கள்.
இயற்கை வழி வேளாண்மையில் நிலத்தையும், சூரிய ஒளியையும் வீணாக்காமல் பயன்படுத்துவதன் அவசியத்தை விளக்குவார்கள். ‘‘ஒரு சதுர அடி இலைப் பரப்பின் மீது எட்டு மணி நேரம் தொடர்ந்து சூரிய ஒளி விழுந்தால் மூன்று கிராம் குளுகோஸ் ஒளிச்சேர்க்கையின் மூலம் தயாரிக்கப்படுகிறது’’ என்று சொல்வார் மராட்டிய கணிதப் பேராசான் ஸ்ரீபாத் தபோல்கர்.
 
அதே புரிதலோடு கியூபா, சூரிய ஒளியை அறுவடை செய்தது. உணவிற்காக பிற நாடுகளை நம்பி இருக்க வேண்டிய அவசியத்தை உடைத்தெறிந்தது. தன் உணவுத் தேவையை தானே பூர்த்தி செய்து கொண்டது. 2000ம் ஆண்டில் நகர்ப்புற வேளாண்மையில் மட்டும் கியூபாவிற்குக் கிடைத்த உணவுப் பொருட்கள் 12 லட்சம் டன். விவசாய நிலங்களிலிருந்தும், கிராமப்புறங்களில் இருந்தும் கிடைத்த உணவுப்பொருட்களின் கணக்கு தனி. இது எவ்வளவு பெரிய வேறுபாடு…? தங்களுடைய உணவுத் தேவைக்காகவும், விவசாயத் தேவைகளுக்காகவும் பிற நாடுகளைச் சார்ந்திருந்த கியூப மக்கள், சில ஆண்டுகளில் தற்சார்பு உணவு உற்பத்தியைச் சாத்தியமாக்கினார்கள்.
New-Picture-11

Cuban Agricultural Production

விவசாயத்திற்காக நாட்டிற்கு வெளியிலிருந்து எந்த ரசாயனமோ, பூச்சிக்கொல்லியோ அவர்களுக்குத் தேவைப்படவில்லை. ‘சூழலியலுக்கு உங்கள் கடனைச் செலுத்துங்கள். மக்களை அல்ல, பசியை எதிர்த்துப் போராடுங்கள்’ என ஃபிடல் காஸ்ட்ரோ விடுத்த அழைப்பை ஏற்று கியூப மக்கள் தங்கள் தேவைகளை சுய முயற்சி மூலம் பூர்த்தி செய்து கொண்டார்கள்.
 
உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு தனிமனிதனின் காய்கறித் தேவையை அறிவிக்கிறது. அதன் படி, ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 300 கிராம் காய்கறி தேவை. இந்த உலகக் கணக்கை கியூப மக்கள் மிஞ்சி விட்டார்கள். அவர்களுடைய அன்றாட காய்கறிப் பயன்பாடு, ஒரு தனிநபருக்கு 469 கிராம். நிலமும், விவசாயத்திற்கான சூழலும் குறைவாக இருந்த கியூபா மாதிரியான குட்டி நாடு ரசாயனங்களைப் பயன்படுத்துவதில் இருந்து விலகி, தங்கள் மண்ணையும் விவசாயத்தையும் உணவுகளையும் மக்களையும் காத்துக் கொண்டிருக்கிறது.
 
விவசாயத்தையே முக்கியத் தொழிலாகக் கொண்ட கோடிக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களும், ஏராளமான வசதிகளையும் கொண்ட நம் இந்தியா, உணவில் ரசாயனம் இருப்பதை வெறுமனே ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது வேடிக்கையானது.
 
சமீபத்தில் தமிழகக் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகம் இருப்பதாகக் கூறிய கேரளா, தன் காய்கறித் தேவைக்காக மாற்று வழிகளைத் தேடத் துவங்கியுள்ளது. மாடித்தோட்டம், இயற்கை வழி வேளாண்முறைகள் மூலமாக காய்கறி உற்பத்தியைத் துவங்குவதற்கான தீவிர வழிகளை ஆய்வு செய்து வருகிறது கேரளா.
 
நாமோ, நல்ல விளைச்சல் உருவாகும் என்று நம்பி ரசாயன மருந்துகளையும், பூச்சிக்கொல்லிகளையும் உணவுப் யிர்களின் மீது பயன்படுத்தி விவசாயத்தை ஒரு ரசாயன தொழிற்சாலையாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். உலகமெல்லாம் ரசாயனங்களின் மீது ஏற்பட்டிருக்கிற அச்சத்தை நாமும் பயன்படுத்திக் கொண்டு, ரசாயனங்களிலிருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடுவது காலத்தின் கட்டாயம்.
 
நம் உணவுப் பொருட்களை விளைவிக்கும் போது அதன் உட்செல்லுகிற ரசாயனங்கள் ஒரு புறம். அதை அறுவடை செய்த பிறகும் நாம் சும்மா விடுவதில்லை. உணவுப் பொருட்களை அழகுபடுத்துவதற்கும், கெடாமல் பாதுகாப்பதற்கும் பல வகையான ரசாயனங்களைப் பயன்படுத்துகிறோம்.
 
ஒவ்வொருவரும் தங்களுக்கு உள்ள சிறிய நிலத்தில்…. மாடியில்…. இயற்கை முறை விவசாயத்தை பயன் படுத்தி உங்களுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்ள ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு, உற்பத்தி செய்து, அதனை உண்டு பயன் பெறுங்கள். ரசாயனம் என்ற விஷம் கலவாத ஆரோக்யமான உடலை பெற்று நோயின்றி வாழ்வோம்.
 
இயற்கைக்கு திரும்புவோம் 🙂
 
நன்றி
 

WatsApp பதிவு. கட்டுரையாளர் விபரம் இல்லை மன்னிக்கவும்..

எம் இன சாவுக்கு நீதி

02-1433258847-karunanidhi

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நானும் எனது குடும்பத்தினரும் இன்று 92 வயது காணும் கலைஞரின் கண்மூடி தனமான ஆதரவாளர்களாக தான் இருந்தோம்.

அன்றைய காலகட்டங்களில் கலைஞரை பழித்தவன் எல்லாம் என் எதிரிகள் என்ற எண்ணத்திலேயே மனம் மிதந்தது.

கலைஞர் நள்ளிரவில் கைது என்ற செய்தி கேட்டு அனைவரும் மிகுந்த வேதனை அடைந்தோம். அன்றைய தேதியில் ஜெயலலிதா என் கையில் சிக்கி இருந்தால் கொலையே செய்திருப்பேன்.
எனது பெரியப்பா மலேயாவில் இருந்து தொலைபேசியில் அழைத்து மிகுந்த வேதனைப்பட்டதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவையும் எம்ஜிஆர் ஐயும் வசை பாடினோம்.

என் வாழ்க்கையில் நான் பார்த்த முதல் உன்னத தலைவன் என்ற எண்ணத்தில் திளைத்தேன்.

தமிழினத்திற்கு இவர் கிடைத்தது ஒரு வரம் என்றிருந்தேன்.

எனது ஊரில் அவர் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் அவரது குரல் கேட்க சென்றுவிடுவேன். அவர் குரல் என்னை ஒவ்வொரு முறையும் மெய் சிலிர்க்க வைக்கும்.

மயிலை மாங்கொல்லை அருகில் தங்கி இருக்கையில் அவரது ஒவ்வொரு பொதுக்கூட்டமும், என் தங்கும் அறைக்கு அருகிலேயே நடக்கும். என் அறையில் இருந்தே மேடை அமைப்பதில் இருந்து, அவர் பேசி முடித்து கிளம்பும் வரை பார்த்து பூரிப்படைவேன், அதனை என் குடும்பத்தாரிடம் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வேன். “கலைஞரை மிக அருகில் இருந்து பார்த்தேன்” என்று.

கலைஞரின் தலைமையில் தான் திருமணம் கூட செய்து கொள்ள வேண்டும் என்று கூட எனக்குள் கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டேன்.

அப்படி அவரை நான் உச்சத்தில் வைத்து மதித்து வந்தேன்.

அப்படிப்பட்ட அவரது நிஜ உருவம் பற்றி நான் தெரிந்துகொள்ள ஒன்றரை லட்சம் சொந்தங்களை கலைஞர் வருணித்த தூவானத்தால் இழக்க நேரிட்டது.

அந்த இழப்பீட்டிற்கு நிவாரணமாக தனது கட்சியினருக்காக மந்திரிப்பதவி வாங்க சக்கர நாற்காலியில் டெல்லி வரை பறந்தார். ஆனால் எம் சொந்தங்களின் இழப்பை மத்திய அரசுக்கு சொல்ல கடிதம் மட்டுமே எழுதினார், எழுதிய கடிதம் டெல்லிவரை பறந்ததா என தெரியவில்லை.

அதே மயிலை மாங்கொல்லை அறையில் நான் 2009 – 2010களில் தங்கி இருக்கும் பட்சத்தில் அவர் பேசிய மேடையில் செருப்பை வீசியிருப்பேன். ஆம் அந்த காலக்கட்டத்தில் தான் இந்த நரியில் சுயநலத்தை எண்ணி வெருப்படைந்திருந்தேன்.
4c8467668d2b7
இவரை நம்பிய எமது பெண்கள் சிங்கள வெறியனால், கற்பழிக்கப்பட்டு, கொடூரமாக சிதைக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டனர், பிஞ்சுகள், சிங்கள கொடியவனின் கத்திகள் மற்றும் துப்பாகிகள் மூலமாக இறந்து உலகை எட்டிப்பார்த்தது,
srilankan tamils genocide
ஆண்கள் துப்பாக்கி குண்டுகளால் சிங்கள நாயால் சுட்டு வீழ்த்தப்பட்டான், இதற்கெல்லாம் ஒரே வார்த்தையில் “சகோதர யுத்தத்தால் வீழ்த்தப்பட்டனர்” என்றார்.

மத்திய அரசு ஆட்சியில் அவருக்கு சகோதரனாய் இருந்த ” காங்கிரசு சகோதரனின்” ஆதரவு யுத்தத்தால் கொல்லப்பட்டனர் என்பதை தான் சொன்னார் என்பது பெரும்பான்மையானோருக்கு புரிந்திருக்காது.

ஈழத்தில் இருந்து ஒரு கிழவி சுயநினைவு இல்லாமல் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபொழுது சற்றும் மனிதாபிமாணம் இல்லாமல் யாரையோ குளிர்விக்க விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அனுப்பினார்.

உலகம் வியந்த ஒருமணிநேர உண்ணா விரத நாடகத்தை செவ்வனே நிகழ்த்திவிட்டு, போர் முடிவுக்கு வந்தது என்ற மாயத்தை உருவாக்கினார்.

Genocide in srilanka
போர் நிறுத்தம் அறிவித்த பின்பு தான் பெரும் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று நாம் பதரியதர்க்கு மழை நின்றும் தூவானம் நிற்கவில்லை என்று கவிதை நடையில் பேசி தனது கவி திறனை நிரூபித்தார்.

இன்னும் எத்தனை எத்தனை சித்து விளையாட்டுகள், உங்கள் சித்து விளையாட்டிற்கு உங்களை அரியணையில் ஏற்றி அழகு பார்த்த தமிழினமா காவு வாங்கப்பட வேண்டும்?

இதற்கும் மேல் காவு கொடுக்க எங்களிடம் சக்தி இல்லை.

உங்களுக்கு சில வேண்டுகோளை வைக்கிறேன், நீங்க இன்னும் இருபது ஆண்டுகளுக்கும் மேல் வாழ வேண்டும், உங்கள் குடும்பத்தில் நடக்கும் சகோதர யுத்தத்தை கண்டுகளிக்க வேண்டும், நீங்கள் முதுமை நோயாலும், படுக்கையில் வேதனையுற்று சாக வேண்டும்.

அதுவே எம் இன சாவுக்கு நீதி.

வாழ்க உங்கள் திராவிட பாசமும், தமிழ் விரோதமும்.

இம்சை அரசர்கள் – SBI & IOB

நீண்ட நாட்களாகவே பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சிஸ்  வங்கிகளின் மேலும் அதன் ஊழியர்களின் மீதும் இனம்புரியா ஒரு வெறுப்பு இருந்து வருகிறது.இதற்க்கு காரணம்:

  • நமது சந்தேகங்களுக்கு அதன் ஊழியர்களின் ஒழுங்கற்ற அக்கறையில்லா பதில்,
  • அவர்களது அலட்சிய தவறுகள்,
  • பணி நேரம் முடிவதற்கு முன்னரே பணியை முடித்துக்கொள்வது
  • கணினி மயமாக்கப்பட்ட கோர் பாங்கிங் (Core Banking) சிஸ்டம் என்று சொல்லிக்கொண்டு அதற்கான எந்த நடைமுறைகளையும் செயல் படுத்தாமல் இருபது.

இந்த மேற்கூறிய காரணங்களால் எனது மாணவ பருவத்தில் ஏற்பட்ட வெறுப்பு இன்று வரை குறைந்த பாடில்லை. மாறாக அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

  • சம்பவம் ௧ [1] :

எனது தேர்வு விடை தாள் மறு கூட்டலுக்கு விண்ணபிக்க கடைசி தேதியன்றே எங்களுக்கு தெரியவருகிறது அன்று தான் கடைசி தேதி என்று அதுவும் சரியாக மதியம் ஒரு மணி சுமாருக்கு, இந்த மறு கூட்டலுக்கு வரைவு காசோலையை (DD) வங்கியின் மூலம் எடுத்து தரவேண்டும் ஆகவே பேருந்தை பிடித்து வங்கியை சென்றடைகையில் சரியாக மணி ௧.௪௫ (1:45 Pm) வங்கி நேரம் சரியாக ௨ (2:00 Pm) மணிவரை, ஆதலால் வரைவு காசோலைக்காண விண்ணப்பத்தை (DD – Chalan) பூர்த்தி செய்து காசாளரை அணுகும் பொழுது மணி சரியாக ௧.௫௦ (1:50 Pm) தொட்டிருந்தது, வங்கி அறிவிப்பு பலகையின் அறிவிப்பு படி காசாளரின் பணி நேரம் முடிய சரியாக இன்னும் ௧௦ (பத்து) நிமிடம் இருக்கிறது. ஆனால் காசாளர் எங்களது விண்ணப்பத்தை வாங்க மறுத்து, இன்றைய கணக்கை முடித்தாகி விட்டது இனி நாளை தான் எதுவும் செய்ய முடியும் என்றார்.

என் நண்பர் காசாளரை கெஞ்ச ஆரம்பித்தார், ஐயா நாங்கள் மாணவர்கள், இன்று தான் விடைத்தாள் மறு கூட்டலுக்கான கடைசி நாள், தயவு கூர்ந்து எங்களின் எதிர்காலத்திற்காக ஏற்கவும் என்று. அதற்க்கு அவர் கொஞ்சமும் செவி சாய்க்கவில்லை. கல் நெஞ்சகாரர், நம்மால் என்ன செய்ய முடியும், அவருக்கு என்ன மாதம் ௨௮ (28) தேதி ஆனால் சம்பளம் வருகிறது. எவனுக்காகவும் பாவப்பட அவசியம் இல்லையே. மேலும் நான் ஐயா இன்னும் நேரம் இருகிறதே என்றேன். அதற்கும் அவர் சளைக்காமல், அதுகென்ன நேரமெல்லாம் பார்த்து வேலை செய்ய முடியாது, இன்றைய கணக்கை முடித்தாயிற்று போய் வாருங்கள் என்ற பதிலே எந்த சஞ்சலமும் இல்லாமல் வந்தது. மேலும் நாங்கள், ஐயா வேண்டுமென்றால் மேலாளரிடம் அனுமதி பெற்று வரவா என்றோம். இதற்க்கு அவருக்கு மிகவும் கோபமாக நீ யார்கிட்ட வேணும்னாலும் போ, ஆனா இன்னைக்கு முடியாது என்று கோபம் கொப்பளிக்க சொனார். (என்னே ஒரு பதில் அதுவும் சேவை துறையில் இருப்பவருக்கு) பிறகு எனக்கு நான் தினமும் சோற்றில் இட்டு உண்ணும் உப்பு வேலை செய்தது. உடனே நான் நண்பர்களிடம் இவனெல்லாம் ஒரு ஆள்னு நாம் கெஞ்சறது தப்பு. வாங்க போலாம், இவன் கிட்ட கெஞ்சரதுக்கு நாம மறுபடியும் இந்த தேர்வை எழுதிக்கலாம் என்று அவர் காது படவே சொல்லிவிட்டு நான் வெளியேறினேன். ஆனாலும் நண்பர் ஒருவர் அவரிடம் காலில் விழாத குறையா கெஞ்சியும் காசாளரின் மனம் இறங்க வில்லை. நண்பரும் மனம் வெறுத்து வங்கியை விட்டு வெளியேறினார் நாமளும் ரெண்டு வார்த்தை திட்டாமல் விட்டுட்டோமே என்ற எண்ணத்தோடு.

  • சம்பவம் ௨ [2] :

IOB Logo

உறவினர் ஒருவருக்கு பணம் செலுத்த (IOB) இந்திய ஓவர்சிஸ் வங்கி கிளைக்கு சென்று பணம் செலுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவரிடம் கொடுத்தேன்.  அந்த விண்ணப்பத்தில் கணக்கு வைத்திருப்பவரின் பெயர், வங்கி கணக்கு எண், என்ன விதமான வங்கி கணக்கு (சேமிப்பு கணக்கா அல்லது நடப்பு கணக்கா என்ற விவரம்), அவர் கணக்கு வைத்திருக்கும் கிளையின் பெயர். Computarised Core banking System கொண்ட வங்கிக்கு இது போதும் தானே, இன்னும் வேறு என்ன வேண்டும்.

ஆனால் விண்ணப்பத்தை பார்த்த உடனே அந்த கணக்காளர் Branch Code இல்லை அதனை எழுதி கொடுங்கள் என்றார். அதற்க்கு நானும் ஐயா எனக்கு தெரியாது நீங்களே பார்த்து சொல்லுங்களேன் என்றேன். அது எங்கள் வேலை இல்லை, நீங்கள் பூர்த்தி செய்தி கொடுத்தால் தான் இனால் ஏற்று கொள்ள முடியும் என்றார். அதற்க்கு நான் உங்கள் வங்கி Core Banking System கொண்டது தானே என்ற உடனே அவர் ஆமாம் அதில் என்ன சந்தேகம், இப்பொழுதெல்லாம் computarised சிஸ்டம் தான் என்றார். சரி பிறகென்ன அந்த கணினியிலேயே பார்த்து சொல்லுங்கள் என்றேன். அதற்க்கு அவர் இங்கெல்லாம் அது வராது. நீங்க கேட்டு சொல்லுங்க  இல்லைனா பின்னால் இருப்பவர்களுக்கு வழிவிடுங்கள் என்றார்.

பிறகு எனக்கு பின்னால் வரிசயில் நின்றிருந்தவரோ, இவங்களுக்கு அதெல்லாம் பார்க்க தெரியாதுங்க. சோம்பேறி பசங்க. தேடி பார்க்கும் அறிவும் இவங்களுக்கு இல்லை இதுல Core Banking System-நு பெருமையா சொல்லிப்பாங்க என்று கணக்காளரின் காதுபடவே சொன்னார். கணக்காளரும் கேட்காதது போல் வேறு பக்க திருப்பி கொண்டார்.  நீங்க Branch Code இருந்தா தான் இங்க பணம் செலுத்த முடியும். நீங்க கேட்டுட்டு வந்து பணம் போடுங்க சார் என்றார். (நம்மை போல இவருக்கு ஒரு மோசமான அனுபவம் இருந்திருக்கும் போல). பிறகு நானும் உறவினரிடம் கிளை என்னை பெற்று பணம் செலுத்தி வந்தேன்.

  • சம்பவம் ௩ [3] :

பாரத ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்துவதற்காக விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு தான் பார்த்தேன் ஒரு அறிவுப்பு பலகை, அதில் இங்கு வேறு வங்கி கிளைகளுக்கு பணம் செல்துவோர், பணம் செலுத்த இயலாது. ஆதலால் இங்கிருந்து நான்கு கட்டிடம் தாண்டி உள்ள இடத்தில Kiosk முறையில் உடனடியாக பணம் செலுத்த முடியும். இங்கு இந்த வங்கி கிளைக்கான கணக்கிற்கு மட்டுமே பணம் செலுத்த இயலும் என்று ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது. நான் உடனே வங்கி உதவியாளரை நாடினேன். இங்கே ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எழுதி வைத்திருகிறீர்களே இவ்விரண்டு மொழி தெரியாதவர்கள் என்ன செய்வார்கள். மேலும் தமிழ் நாட்டில் தமிழில் கூட எழுத கூடாதா என்ன என்றேன். அதற்க்கு அவர் எனக்கு தெரியாது நீங்க வேணும்னா எழுதுனவங்கள கேளுங்க என்றார். சரி இதை யார் எழுதியது என்றேன். அதற்க்கு அவரிடம் பதில் இல்லை. நானும் விடுவதாய் இல்லை.

சில நிமிடங்களுக்குப் பின் அவர் மேலாளர் தான் எழுதினார் என்றார். நானும் சரி அவரிடம் பொய் பேசிக்கொள்கிறேன் என்று  தனி அறையில் செய்தி தாள் படித்துக் கொண்டிருந்த மேலாளரை அணுகி அந்த பலகை பற்றி கேட்டேன்.  அதற்க்கு அவர், சார் இதெல்லாம் ஒரு பிரச்சினையா, அதான் உங்களுக்கு புரியுது இல்ல அப்புறம் என்ன சார் என்றார். எனக்கு புரியுதுங்க ஆங்கிலமும் ஹிந்தியும் தெரியாதவன் என்ன செய்வான், தமிழ் நாட்டில் தமிழில் கூட எழுத கூடாதா  என்றேன். அதற்க்கு அவர் அந்த பலகையில் இடம் இல்ல என்று சொனார். எனக்கு கோபம் தான் வந்தது. பிறகு நான் ஐயா இனியாவது தமிழிலும் எழுதி வையுங்கள். தமிழ் நாட்டில் தமிழனுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்றால் வேறு எங்கு தான் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு வெளியேறினேன்.

  • சம்பவம் ௪ [4] :

பணம் செலுத்த பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்ற பொழுது அங்கு பெரும் சுரண்டல் நடப்பது அப்பொழுது தான் புரிந்தது, ஆம் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்துவோர், அந்தந்த வங்கி கிளையில் மட்டுமே பணம் செலுத்த முடியும் அதாவது நான் மேற்கு மாம்பலம் கிளையில் வங்கி கணக்கு வைத்திருக்கும் பட்சத்தில் எனக்கு வேறு யாராவதோ அல்லது நானோ பணம் செலுத்த வேண்டுமானால் அதே கிளைக்கு சென்று தான் பணம் செலுத்த இயலும்.  விளக்கமாக சொல்லவேண்டுமானால் நானோ அல்லது வேறு யாரோ அண்ணா நகரில் உள்ள கிளையில் பணம் செலுத்த இயலாது. என்னுடைய சொந்த கிளையில் (மேற்கு மாம்பலம்) கிளையில் மட்டுமே செலுத்த முடியும்.

SBI Kiosk Banking

SBI Kiosk Banking

சரி வேறு வழி இல்லை அண்ணா நகர் கிளையில் மட்டுமே என்னால் செலுத்த முடியும் என்றால் அதற்காக ஒரு தனியார் நிறுவனத்தை நியமித்து அதன் மூலம் தான் பணம் செலுத்த முடியும். இந்த முறைக்கு கியோஸ்க் (Kiosk)  என்று பெயர் வைத்திருகிறார்கள். இந்த முறையில் பணம் செலுத்த ரூ.௧௦௦ (100) ரூபாய்க்கு ரூ.௨௫ (25) என்ற ரீதியில் முகவர் தரகு / சேவை கட்டணம் பிடித்தம் செய்யபடுகிறது

100 முதல்  – 1000 வரை  ரூ.25 முகவர் தரகு / சேவை கட்டணம்

1001 முதல் – 5000 வரை ரூ.50 முகவர் தரகு / சேவை கட்டணம்

5001 முதல் – 10000 வரை ரூ.100 முகவர் தரகு / சேவை கட்டணம்

இத்தகைய பிடித்தம் என்பது நாம் எடுக்கு வரைவு காசோலைக்கு கூட இவ்வளவு தொகை சேவை கட்டணமாக பெறுவதில்லை. இதில் தான் பகல் கொள்ளையே. இந்த முறையில் பணம் செழுத்துபவர்கள் பெருபாலும் கூலி தொழிலாளர்களே.

இதை விடுத்தது நாம் வேறு ஒரு வழியிலும் பணம் செலுத்தலாம் :

பச்சை அட்டை முறை:

நாம் அடிக்கடி ஒரு வங்கி கணக்கிற்கு (வேறு கிளை கணக்கிற்கு) மட்டும் பணம் செலுத்தும் பட்சத்தில் நமது அடையாள சான்றிதழை சமர்பித்து இணைப்பு வங்கி கணக்கை தெரிவித்து ஒரு பச்சை நிற அட்டை பெற வேண்டும். அந்த அட்டையின் மூலமாக நாம் அந்த அட்டையின் இணைப்பு வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தலாம். இந்த பச்சை அட்டையை வைத்து ஒரே ஒரு கணக்கிற்கு மட்டுமே செலுத்த முடியும், வேறு வேறு கணக்கிற்கு செலுத்த இயலாது, இரு வேறு கணக்குகளுக்கு தொடர்ச்சியா பணம் செலுத்த விரும்பினால் இரண்டு பச்சை அட்டைகளை விண்ணப்பித்து பெற வேண்டும். இத்தகைய செயல் பாடுகளானது சாமானியர்கள், மற்றும் வறியவர்களின் பண பரிவர்த்தனைகளை நோட்டம் விடும் விதமே அமைகிறது.

இந்த பச்சை அட்டை முறையும் அணைத்து வங்கி கிளைகளிலும் செயல் படுத்தப்பட வில்லை. இதற்கென சில கிளைகள் மட்டுமே உள்ளது.

அப்புறம் எதுக்குங்க வங்கியை Computarize பண்ணியாச்சு, Core Banking system பண்ணியாச்சுன்னு தம்பட்டம் அடிக்கறாங்க.  மேற்கூறிய Computarized மற்றும் Core Banking system இரண்டுமே எந்த கிளையில் இருந்து வேண்டுமானாலும் எந்த கிளைக்கும் பணம் செலுத்தலாம் என்ற அர்த்தம் தானே. பிறகேன் இப்படி ஒரு முறை.

இவிங்க திருந்தவே மாட்டாங்களா???

Unconstitutional to hang convicts in Rajiv Gandhi case now – Former Judge

Over 13 years after confirming the death sentence of three accused in the Rajiv Gandhi assassination as head of a Supreme Court Bench, former judge K T Thomas today said it would be “constitutionally incorrect” to hang them as the convicts have spent 22 years in jail without a “review” of their case.

“We have not considered the nature and character of the accused who were sentenced to death penalty in the Rajiv Gandhi assassination case, and so death sentence is against Article 22 of the constitution,” Justice Thomas,
who headed the three-judge bench, told PTI. “It will be constitutionally incorrect to hang them very late,” he said. In 2010, the apex court bench headed by Justice S B Sinha in the Bariyar case had observed that while passing the death sentence, the personal character of the criminal should be taken into consideration, Justice Thomas said. Moreover, the three death row convicts in the Rajiv Gandhi assassination case Murugan, Santhan and Perarivalan have been in prison for over two decades, the former apex court judge added.

For any life imprisonment, every prisoner is entitled to have a right to get his case reviewed, whether remission can be announced or not, he said. Since the three were death row convicts, they underwent a long period of imprisonment without getting the chance to have a “review” of their case, Thomas said.

Rajiv Gandhi was assassinated by a woman suicide bomber on May 21, 1991, at Sriperumbudur. A designated court had in 1998 imposed death penalty on 26 persons but when the case reached the Supreme Court, capital punishment was confirmed only for four — Nalini,
Murugan, Santhan and Perarivalan. Nalini’s death penalty was commuted to life imprisonment by the Tamil Nadu Governor in 2000 following a recommendation by the state cabinet and a public appeal by Congress President Sonia Gandhi.

The execution of the remaining three convicts, which was scheduled for September 9, 2011, was stayed by Madras High Court for six weeks in August of that year. The case has since been transferred to the apex court. Prior to this, the mercy petitions of the three were rejected in 2011 by Pratibha Patil when she was the President, which was challenged by them.

Source :

http://www.indianexpress.com/news/unconstitutional-to-hang-convicts-in-rajiv-gandhi–case-now-former-judge/1078970/0

Others

TOI :
http://timesofindia.indiatimes.com/india/Constitutionally-incorrect-to-hang-the-three-says-judge-who-confirmed-death-for-Rajiv-killers/articleshow/18652192.cms

IBN Live :

http://ibnlive.in.com/news/hanging-rajiv-gandhis-killers-will-be-constitutionally-incorrect-former-sc-judge/374830-3.html.

கழகத்தமிழ் வினா விடை

Thunderbirdஇந்நூலானது தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் நூல், தமிழ் கொள்கைகளை பற்றி தமிழ் மக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என்ற அடிப்படையில் – திருமந்திர மணி துடிசைகிழார் அ. சிதம்பரனார் அவர்களால் எழுதப்பட்டது. இந்த நூலின் முதற் பதிப்பு 1943-ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது. இந்த நூல் திருநெல்வேலி தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தால் வெளியிடப்பட்டது.

நூலில் உள்ள தகவல்கள்: தமிழ் நாடு யாது?, மக்களிடம் மாறுபாடு உண்டா?, இந்துக்கள் யார்? இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு, தமிழர்களுக்குள் வகுப்புகள் உண்டா? தமிழர்களின் மொழி என்ன? தமிழர்களின் முக்கிய கொள்கைகள் என்ன? தமிழர்களின் அறம், கொள்கைகள் ஆகியன அடங்கியுள்ளது

இந்நூலின் கருத்தக்களை நாம் அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும்.

<div style=”margin-bottom:5px”> <strong> <a href=”http://www.slideshare.net/smohankr/kalaga-thamil-vinaa-vidai&#8221; title=”Kalaga Thamil Vinaa Vidai ” target=”_blank”>Kalaga Thamil Vinaa Vidai </a> </strong> from <strong><a href=”http://www.slideshare.net/smohankr&#8221; target=”_blank”>Mohan Kumar</a></strong> </div>

தை திருநாளில் கருத்தில்கொள்ள வேண்டியது “நீர்”

இந்த இனிய தை திருநாளில் மனிதர்களாக நாம் அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டியது “நீர்”

சில நாட்களுக்கு முன்னர்  ஆங்கில நாளேட்டில் நமகெல்லாம் கொடுக்கப்பட்ட அரு அதிர்சிகரமான எச்சரிக்கை என்னவென்றால்  தமிழகத்தில் நிலத்தடி நீர் இருப்பு மிகவும் அபாயகரமாக குறைந்து வருகிறது (http://www.infoog.com/weblogs/ground-water-level-in-tamilnadu.html)..  இதே நிலை நீடித்தால் தண்ணீருக்கு எங்கே போவது?. நீர்வளம் குறைந்தால்  விவசாயம் பாதிக்கப்படும், பாதிக்கபடுவது விவசாயி மட்டுமே என்றெண்ணி இருத்தல் ஒரு மிகப்பெரிய முட்டாள் தனம். விவசாயி மட்டும் அல்ல அணைத்து உயிரினங்களும் நீரின்றி என்ன செய்யப்போகிறது என்று எண்ணிப்பாருங்கள்.
உங்களது சந்ததிகளுக்கு தண்ணீரற்ற உலகையா விட்டு செல்லப்போகிறீர்கள்?
“தண்ணீரை பணத்தை போல சிக்கனமாக செலவழிக்கவேண்டும்”. பணத்தை விரையம் செய்துவிட்டால் கூட நீங்களோ உங்களது வாரிசுகளோ சம்பாதித்து விடலாம் நீரை விரயம் செய்தால் மீண்டும் பெறுவது இயலாது.
தண்ணீரை சேமித்தல் என்பது, சம்பாதிக்காமல், இருக்கும் பணத்தை மட்டும் பூட்டி வைப்பது போன்றது (இது இயலாதது) அது போல தான், மரம் நடுதல் என்பது நீரை உற்பத்தி செய்வதற்கான மூல ஆதாரம்.  மரம் நடுதலே நாம் இழந்த நீர் ஆதாரத்தை மீட்டுப்பெற ஒரே வழி.
இன்றைய சமூக வளர்சிக்காக நாம் எண்ணற்ற மரங்களை இழந்துவிட்டோம். இதனை  கருத்தில் கொள்ளாமல் நாம் இன்னமும் காலத்தை கழித்தால் இதைவிட மூடத்தனம் எதுவும் இல்லை.
மரம்- நீருக்கு மூல ஆதாரம் மட்டும்மல்ல நமது உயிர்மூச்சிர்க்கும் (ஆக்சிஜன்) மூல ஆதாரம். மரம் இல்லையேல் நாம் நமது சுவாசக்காற்றிர்க்கும் விழி பிதுங்கி நிற்கும் காலம் விரைவில்.

 

Plant More Trees for Better future
வருடத்திற்கு ஒரு மரமாவது நடுவோம் நமது குழந்தைகளுக்காக – ‘இது சுயநலமாக இருந்தாலும் நல்லதே”.

Sri Lanka’s Killing Fields 2 – Unpunished War Crimes

British Television channel 4’s video evidence on war crimes and genocide of Tamils by Srilankan government.

“More than 40,000 Tamil Civilians were killed by the Srilankan armed forces during the final stages of war” – United Nation’s Expert Panel Report, March 2011

Note : Kindly Avoid weak hearted and children

 

PORKUTRAM TAMIL 2

Take Action

Please take a moment to sign petition

http://www.srilankacampaign.org/takeaction.htm

Ban Ki Moon must act on war crimes

Related Link:

http://blog.srilankacampaign.org/2012/03/what-happened-in-mullaittivu.html

 

Tamil Kolaveri Da – HD (Jaffna Version)

மானமுள்ள யாழ்ப்பாணத் தமிழன் வெளியிட்டுள்ள கொலைவெறிப்பாடல்: இப் பாடல் தனுஷ் பாடிய பாடலுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழை ஏன் இவ்வாறு கொலைசெய்கிறீர்கள் எனக் கேட்டு இப் பாடல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு வந்து பாருங்கள் தமிழ் என்றால் என்ன என்று உங்களுக்குப் புரியும் என அதில் சேர்க்கப்பட்டுள்ள வசனங்கள் தூள் கிளப்பும் வகையில் அமைந்துள்ளது.

Bodhi Dharma in WikiPedia – How the History Ruined!!!

Bodhi Dharma in Wikipedia – How the history ruined in wikipedia. its a serious attack about  tamil community from a particular ……………

 

போதி தர்மன் பற்றி விக்கிபீடியாவில் :
ஒரு மாதத்திற்குள் எப்படி இந்தியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரித்து பதிவு செய்து விட்டார்கள் பாருங்கள் தோழர்களே. இப்படி தான் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக அவர்கள் செய்திருக்கிறார்கள். இனியாவது இதை நாம் முறியடிப்போம்.

About Bodhi Dharman in Wikipedia -Ruined History

 

Share With Your Friends.

Don’t Let Others Ruin Our History.