கழகத்தமிழ் வினா விடை

Thunderbirdஇந்நூலானது தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் நூல், தமிழ் கொள்கைகளை பற்றி தமிழ் மக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என்ற அடிப்படையில் – திருமந்திர மணி துடிசைகிழார் அ. சிதம்பரனார் அவர்களால் எழுதப்பட்டது. இந்த நூலின் முதற் பதிப்பு 1943-ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது. இந்த நூல் திருநெல்வேலி தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தால் வெளியிடப்பட்டது.

நூலில் உள்ள தகவல்கள்: தமிழ் நாடு யாது?, மக்களிடம் மாறுபாடு உண்டா?, இந்துக்கள் யார்? இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு, தமிழர்களுக்குள் வகுப்புகள் உண்டா? தமிழர்களின் மொழி என்ன? தமிழர்களின் முக்கிய கொள்கைகள் என்ன? தமிழர்களின் அறம், கொள்கைகள் ஆகியன அடங்கியுள்ளது

இந்நூலின் கருத்தக்களை நாம் அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும்.

<div style=”margin-bottom:5px”> <strong> <a href=”http://www.slideshare.net/smohankr/kalaga-thamil-vinaa-vidai&#8221; title=”Kalaga Thamil Vinaa Vidai ” target=”_blank”>Kalaga Thamil Vinaa Vidai </a> </strong> from <strong><a href=”http://www.slideshare.net/smohankr&#8221; target=”_blank”>Mohan Kumar</a></strong> </div>

Tamil Decimal Calculation !!!!!!!

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!! தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ? அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..

 1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்.

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!! இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும் தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்

நன்றி: Jacob M B A
(Shared by Jacob MBA)

முறையாகுமா இந்த மொழிக்கலப்பு? – கவிக்கோ ஞானச்செல்வன்

வேளாண்மையில் கலப்புமுறை விளைச்சல் என்பது வரவேற்கத்தக்கதாகலாம். கலப்புத் திருமணங்களும் பாராட்டத்தக்கவையே.ஆனால், மொழிக்கலப்பு அத்தகையதாகாது. தமிழில் பிறமொழிக் கலப்பு, காலம்காலமாக நடந்து வருவதுதான். ஆனால், இப்போது தமிழில் ஆங்கிலம் கலப்பதுபோல் இவ்வளவு கேவலமாக முன்னெப்போதும் நடந்ததில்லை.

ஆங்கிலத்தில் பேசுவது நாகரிகம்; படித்தவர்க்கு அடையாளம் என்றே இப்போதும் பலர் கருதுகிறார்கள்.

பாதித்தமிழ் மீதி ஆங்கிலம், ஆங்கிலத்தில் தொடங்கித் தமிழில் முடிப்பது, தமிழில் தொடங்கி இடைஇடையே ஆங்கிலச் சொற்களைக் கலப்பது என்று பல போக்கில் தமிழர்கள் பேசி வருகிறார்கள்.

சோறு என்று சொல்லவும் தமிழன் வெட்கப்படுகிறான். தயிர்ச்சோற்றை “கர்டு ரைஸ்’ என்பான்; இன்னும் லைம் ரைஸ், ஒயிட் ரைஸ் இப்படியே நீளும்.

பள்ளிப் பிள்ளைகள் வீட்டிலிருந்து புறப்படும்போது “அம்மா போயிட்டு வர்றேன்’ என்று சொல்லுவதைப் பெற்றோரே இழிவாகக் கருதுகிறார்கள். “மம்மி பை பை’, “டாடி பை பை’ என்று சொல்லப் பழக்கிவிடுகிறார்கள்.

மதிய உணவு என்பதைக்கூட “லஞ்ச்’ என்று சொல்லக் கட்டாயப்படுத்துகிறார்கள். யாரும் இப்போது வீட்டிலிருந்து விடைபெறும்போது “போய் வருகிறேன்’ “என்ன வரட்டுமா?’ என்று சொல்லுவதில்லை. எல்லோரும் “டாட்டா, பைபை’தான்.

“ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே அறிவு வளரும்’ என்ற புதிய மூடநம்பிக்கை நாட்டில் பரவிக் கிடக்கிறது. அதனால் ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்த்து விடுவதோடு, வீட்டிலும் ஆங்கிலம் பேசு எனப் பிள்ளைகளை ஊக்கப்படுத்துகிறார்கள்.

தமிழ்வழிப் பள்ளிகளில் படித்தவர்கள் தாம் நம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்றவர் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

வடக்கே வாழ்பவர்கள், நாம் அவர்களைச் சந்திக்கும்போது நமக்கு இந்தி தெரியாது என்று தெரிந்தும் நம்மோடு இந்தியில்தான் பேசுகிறார்கள்.

நாம் உடனே, இந்தி மாலும் நகிஎன்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசுகிறோம்

அப்போதும் அவர்கள் இந்தியில்தான் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்து விடாதீர்கள்; தெரிகிறது, நன்றாகவே ஆங்கிலம் கற்றிருக்கிறார்கள். 

ஆனாலும், நம்மோடு ஆங்கிலத்தில் பேச மறுக்கிறார்கள். “நீங்கள் ஏன் இந்தி படிக்கவில்லை?’ என்று நம்மைக் கேட்கிறார்கள். நம்மை எப்படியாவது இந்தி பயிலச் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். இச்செய்தி பட்டறிந்து உணர்ந்தது. நமக்கு (தமிழர்களுக்கு) ஏன் இந்தப் பற்று இல்லை? 

நம்முடைய காட்சி ஊடகங்களில் இசை, நாட்டியம், உரையாடல், நகைச்சுவை, சந்திப்பு, திரைப்படம் என்று எந்தப் பொருளில் நிகழ்ச்சி நடந்தாலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் – வருணனையாளர் அவருடன் உரையாடும் விருந்தினர், நடுவர்கள், பங்கேற்பவர்கள் – இப்படி யாராக இருந்தாலும் தமிழில் பேசுகிறார்களா?

தமிழில் தொடங்குவார்கள், பிறகு கடகடவென என்ன சொல்லுகிறார்கள் என்பதே நமக்குப் புரியாதவாறு ஆங்கிலத்தில் கொட்டி முழக்குகிறார்கள். பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் பேசினால், ஏற்றுக்கொள்ளலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரும் அப்படிப் பேசும்போது எரிச்சல் ஏற்படுகிறது.

நமது திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தமிழை வளர்க்க வேண்டும் என்று நாம் கோரவில்லை. தமிழைச் சிதைக்காதீர்கள் – இருப்பதையும் கெடுக்காதீர்கள் என்றே வேண்டுகிறோம்.

“நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே’ “அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே’ என்றெல்லாம் கேட்ட நம் காதுகளில், “ஜாலிலோ ஜிம்கானா,டடடா டடடா டட்டாடா, மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு…’ போன்ற பாடல்கள் தேளாய் வந்து கொட்டின.  இப்போது கருநாகப் பாம்பே வந்து கடிக்கிறது. ”

“ஹீ ஈஸ் த ஹீரோ ஹீ ஈஸ் த ஹீரோ காக்கவந்த பார்ட்டி யாரோ?” இது ஒரு தமிழ்ப்பாட்டின் தொடக்கம்.

ஆத்திச்சூடி.. ஆத்திச்சூடி… யு.எ. ஆத்திச்சூடி…. என்று தொடங்கித் தமிழைக் கேவலப்படுத்தும் பலமொழிக் கலப்பு.  “யூ வண்ட் டு சீல்மை கிஸ்  பாய் யூ கான்ட் டச் திஸ்  எவரிபடி ஹைப்நோடிக் ஹைப்நோடிக் சூப்பர் சானிக் சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ்”

இப்படிப் போகிறது தமிழ்ப்பட பாட்டொன்று. சூழ்நிலைக்கேற்ப நாங்கள் எழுதுகிறோம் என்பார்கள். பின்னர் ஏன் பாட்டைத் தமிழில் தொடர வேண்டும்?

“”பூஜ்யம் என்னோடு

பூவாசம் இன்றோடு

மின்மினிகள் விண்ணோடு

மின்னல்கள் கண்ணோடு”

ஏனிந்தக் கலப்படம்? இங்கே ஒருசில சோறுகள் சிதறப்பட்டன. பானைச்சோறு அப்படியே இருக்கிறது. கொட்டிக் காட்ட இடமில்லை.

திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் மானியம் கிட்டும் என்றார்கள். அதனால், ஆங்கிலத் தலைப்புகள் மாறித் தமிழில் பல வந்தன. அவற்றுள்ளும் பல கேலிக்கு இடமானவை. பொருளில்லாத ஓரெழுத்தில் ஒருபடத் தலைப்பு. ஏமாற்று வித்தைகளும், “அடாவடித் தலைப்புகளும் இடம்பெற்றன. நல்ல அழகிய படப்பெயர்களும் வந்தன.

நம் தமிழ் ஏடுகள் – பத்திரிகைகள் பல அவற்றின் பெயரோடு ஆங்கில ஒட்டுச் சொற்களுடன் வெளிவருகின்றன. பெயர்களை நாம் வெளிச்சம் போட்டுக் காட்டாமலே நம் அன்பர்களுக்கு அவை எவை எனப் புரியும்.

பத்திரிகை உள்ளே பல செய்திகள் ஆங்கிலத் தலைப்புகளில் வருகின்றன. அப்படி என்ன மயக்கம்? எல்லாம் “வணிக உத்திகள்’ என்பார்கள்.

ஃகாபி வித்…., இன்டர்வியூ, ஹிட்சாங்ஸ், ஓல்டு ஈஸ் கோல்டு, பீச் கேர்ள்ஸ், மியூசிக் மியூசிக், சூப்பர் சிங்கர், “ஹோம் ஹாப்பி ஹோம்’ இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ தலைப்புகளில் நம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.

இவை தவிர பிறமொழித் தொடர்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு, “கன்னா பின்னா’ என்று தமிழில் வந்துகொண்டுள்ளன. யார் கேட்பது? யாரிடம் முறையிடுவது? “தமிழன் தமிழன்’ என்று பேசுவது வீண்பேச்சு.

  தன் அன்னை ஊட்டி வளர்த்த மொழி – அமுதம் அனைய மொழியைச் சிதைத்தும் சிதைவதைக் கண்டும் வாளா இருக்கிறோமே! நாம் தமிழர் என்பதில் நமக்குப் பெருமை இருக்கிறதா?

  இப்படியெல்லாம் சிந்தித்தால் மொழி வெறி என்று தூற்றுவது முறையா? ஊர் உலகத்தைச் சுற்றிப் பாருங்கள். சுற்றி வந்தவர்களைக் கேளுங்கள். எங்கும் இத்தகைய கொடுமை உலக நாடுகளில் இல்லை. இல்லவே இல்லை.

நம்முடைய விழுமியங்கள் பாழாகின்றன; பண்பாடு பறிபோகிறது; ஒழுக்கம் கெட்டழிகிறது. மொழி சித்திரவதை செய்யப்படுகிறது.

காட்சிகளால், கருத்துகளால், உடைகளால், உரையாடல்களால் அனைத்தாலும் கெட்டுக் கலப்புச் சாதி ஆனதோ தமிழ்ச்சாதி என்று அரற்ற வேண்டியுள்ளது.

காலத்தின் போக்கை அறியாமல் பழங்கதை பேசுகிறோம் என்று கருத வேண்டாம். எத்தனை காலம் மாறினாலும் எத்துணை மாற்றங்கள் ஏற்பட்டாலும் மொழியும் பண்பாடும் சீரழிய நாம் அடைகிற வளர்ச்சி உண்மையில் வளர்ச்சியாகாது; அது வீக்கம், நோய்.

“ஓகே ஓகே’, “வெரி நைஸ்’, “ஒண்டர்ஃபுல்’, “சூப்பர்’, “தாங்யூ’, “ஃபென்டாஸ்டிக்’, “ஷியூர் ஷியூர்’ என்றெல்லாம் நம் பேச்சில் இணைந்து வரும் சொற்களால் நாம் உயர்ந்துவிட மாட்டோம். நம் செயல்களே நம்மை உயர்த்துகின்றன.

உலகம் போகிறபோக்கில் நாமும் போக வேண்டும் என்பார்கள். செம்மறி ஆட்டுக் கூட்டமாய்ப் போக வேண்டுமா? சிந்தனையுள்ள மனிதனாக வாழ வேண்டுமா?

-கவிக்கோ ஞானச்செல்வன்

நன்றி : தினமணி 30 Sep 2011

தீபாவளி தமிழர் விழாவா?

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை – விரதம், நோன்பு – உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி – யார் – எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் – பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

-தந்தை பெரியார்

What is Deewali

தமிழை வாழவைப்போம், தமிழனாய் வாழுவோம்.

மாற்றான் கலாச்சாரத்தில் அழியும் தமிழனுக்கு ஒரு கடிதம்.
அன்பிற்கும் பண்பிற்கும் பெயர்போன தமிழா என் மனக்குறையை உன்னிடம் சொல்கிறேன், மனதில் பதியவைக்காவிட்டாலும் பரவில்லை, ஒருமுறையாவது படித்துவிடு போதும். நம் பெற்றோர் செய்த தவறை நாம் மீண்டும் செய்யவேண்டாம், நமது பெற்றோர் செய்ததவறு அவர்கள் காலத்தில் அவர்களுக்கே தெரியாமல் செய்துவிட்டார்கள். ஆனால் நாமும் இவளவு படித்த பின்பும் உலகை புரிந்து வைத்த பின்பும் நாம் செய்வது மிகப்பெரிய தவறே. நமது பெற்றோர்கள் செய்த தவறை நாம் மீண்டும் செய்யகூடாது என்ற காரணத்தினால்தான் நம்மை முடிந்த அளவுக்கு படிக்கவைத்தார்கள். நமக்கு பகுத்து ஆராயும் திறனை வளர்த்தார்கள். ஆனால் அவர்களின் தவறை விட நாம் மிக கேவலமான தவறை செய்கின்றோம். அவர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப்போடுகிறோம், அப்படி என்ன தவறு அவர்கள் (நம் பெற்றோர்கள்) செய்தார்கள், நாம் என்ன தவறை செய்தோம் என்று கேட்கிறீர்களா? இப்படி கேட்க நினைத்தால் நீங்கள் பகுத்து ஆராயும் திறன் உடையவர் தான், உங்கள் தவறை நீங்கள் கண்டிப்பாக திருத்திக்கொள்வீர்கள்

சரி விசயத்திற்கு வருவோம், நம்மை விட நம் பெற்றோர்கள் (ஏன் அவர்களின் பெற்றோர்களும் தான்) புரட்சியாளர்கள் தான்,  ஆனால் நாம் தான் நாகரிகம் என்ற பெயரில் மாற்றானின் நாகரீகத்திற்கு அடிமையாகி உள்ளோம். ஆம், என் தந்தையின் தாத்தா பெயர் காளியப்ப………(சாதிப் பெயர்), எனது தாத்தா பெயர் நல்லப்ப…….(சாதிப் பெயர்), ஆனால் எனது தந்தையின் பெயர் சுப்பிரமணியம் இதில் சாதியின் பெயர் இல்லை.  காரணம் தெரியாது. ஆனால் இது பாராட்ட கூடிய விசயமே, பிறகு என் தந்தை எனக்கு மோகன்குமார் என்ற பெயரை வைத்தார். அவருக்கு ஏனோ தெரியவில்லை இந்த பெயர் வடமொழி பெயர்  என்று. ஆனால் எனது பெயரில் ஏனோ ஜாதியை சேர்க்கவில்லை (இந்த நூற்றாண்டில் இந்தியாவிலேயே சாதிபெயரை பெயருடன் சேர்க்காமல் இருக்கும் ஒரே இனம் தமிழ் இனம் – காரணம் தமிழன் மேம்பட்டுவிட்டான்).  நானும் கூட என் பெயரை நினைத்து பலநாட்கள் பெருமைப்பட்டு கொண்டேன். நல்ல நாகரீகப்பெயர் என்று (Modern Name). பெருமை பட ஒன்றும் இல்லை, இது சிறுமை படக்கூடிய செயல் என்று இப்போ புரிந்தது.

இப்போது எனக்கு சில கேள்விகள் எழுந்துள்ளது, நான் ஏன் மாற்றானின் மொழிகொண்ட பெயரை வைத்துகொள்ள வேண்டும்? அப்படி என்ன என் மொழி கீழான மொழியா? என்மொழிக்கு தனித்துவம் கிடையாதா? என் மொழியில் பெயர் வைத்தால் எனக்கு சமூகத்தில் மரியாதையை கிடைக்காதா? இல்லை என் மொழியில் நல்ல தமிழ் பெயர்கள் அரிதா? என் தந்தை செய்த அதே தவறை நானும் இனி செய்யமாட்டேன், என் தந்தையும் கூட நாங்கள் செய்த தவறை நீங்களும்  செய்யவேண்டாம் என்று, அவரது பெயரன் பேத்திகளுக்கு தமிழ் பெயரை சூட்டுமாரே அறிவுறுத்துகிறார்.
 
உலகில் எங்காவது மற்ற மொழிக்காரன் தமிழ் பெயரை தனக்கு வைத்துள்ளானா? தனது வாரிசுகளுக்கு வைத்துள்ளனா? வைத்தால் என்ன தவறு? இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை, அவன் தனது தாய் மொழியை மதிக்கிறான், நேசிக்கிறான். அவன் மொழியை விட சிறந்த மொழி வேறொன்றும் இல்லை என நினைக்கிறான். (மேலும் மற்றுமொரு முக்கியமான ஒரு விஷத்தை கவனியுங்கள், வடநாட்டான் நம்மை விட பிந்தங்கியுள்ளான், ஆம், அவன் தனது பெயரில் ஜாதி பெயரைக்கொண்டுள்ளான் நாம் அவனை விட மேம்பட்டுள்ளோம் இப்படிபட்டவனுக்கே மொழிப்பற்று இருக்கும் பொழுது நமக்கு வேணாமா?) இப்போதுள்ள இளைஞர்கள் (youths) தனது வாரிசுகளுக்கு மாடர்ன் நேம் (Modern Name) என்ற பெயரில் வாயில் உச்சரிக்க இயலாத வடமொழி பெயர்களை வைக்கிறார்கள். தனது பெயரையும் (அரைகுறை தமிழ் பெயரையும்) நியுமராலாஜி (Numerology) என்று சொல்லிக்கொண்டு கண்ட கண்ட மொழியில்  வாயில் நுழையாதபடி மாற்றிகொள்கிறார்கள். அரைகுறை ஆடைகள் மட்டும் கலாசார சீர்கேடு அல்ல இதுபோன்ற மொழி புறக்கணிப்பும் கலாசார சீர்கேடுதான்.  இப்படிப்பட்ட கலாசார சீர்கேட்டை தமிழன் மட்டுமே மிக முனைப்புடன் ஆர்வமாக செய்கிறான். காரணம் தமிழின் தனித்துவத்தை அவன் தெளிவுற தெரிந்திருக்கவில்லை.

எண்ணியல் அறிஞர்களே (Numerologist)  நீங்களும் திருந்துங்கள், நீங்களும் உங்களை அணுகுபவர்களுக்கு ஏன் நல்ல தமிழ் பெயரை பரிந்துரை செய்யகூடாது?, உங்களது தொழில் தர்மம் ( Business Ethics) ஒத்துக்கொள்ளதோ? தமிழ் பெயர் வைக்க சொன்னால் உங்கள் எண்ணியல் பலனளிக்காதோ? நீங்களும் தமிழன் தானே? வடநாட்டானிடம் எதாவது கடமைப்பட்டு இருகிறீர்களா? ஏன் இப்படி உங்கள் தாய் மொழிக்கு துரோகம் செய்கிறீர்கள்? தாய் மொழித்துரோகம் தாய்க்கு துரோகம் செய்வது போன்றது.



தமிழ் ஆசிரியர்களே
தாங்கள் மிகப்பெரிய குற்றவாளிகள் ( தமிழை வளர்க்கவும் அழிக்கவும் உங்களிடமே விதை நடப்படுகிறது) நீங்கள்  தமிழ் பாட நூலில் உள்ள பாடங்களை முடித்தால் போதும் உங்கள் வேலை முடிகிறது என்று நினைகிறீர்கள். இப்படி நினைப்பவர்கள் அனைவருமே குற்றவாளிகள் தான். உங்கள் மாணவர்களுக்கு தமிழின் சிறப்பியல்புகளை எடுத்துக்கூறவேண்டும், மேலும் தமிழின் சிறப்பு எழுத்தான “ழ” சரியாக உச்சரிக்க செய்யவேண்டும், அதற்க்கான பயிற்சியும் கொடுக்கவேண்டும். எனது தமிழாசிரியர் அதை செய்யவில்லை, நான் பல காலங்களாக தமிழை தமில் என்றும், பழத்தை பலம் என்றும்தான் உச்சரித்தேன் (இன்னும் நிறைய தவறுகள் செய்தேன்) இப்பொழுது தான் அறிவு வந்து சரியாக உச்சரிக்க முயற்சி செய்துவருகின்றேன். கடமைக்காகவும் பணத்திற்காகவும் மட்டுமே தயவு செய்து பணியாற்றாதீர்கள். தமிழுக்காகவும் அதனை வளர்க்கவும் முயற்சி செய்யுங்கள். பல மாவட்டத்தை  ( சேலம்,கிருஷ்ணகிரி, தருமபுரி,நாமக்கல்,திருச்சி,ஈரோடு,கோவை -உலக செம்மொழி மாநாடு நடந்த மாவட்டம் ,கரூர்,திண்டுக்கல், மதுரை) சேர்ந்தவர்கள் “ழ”வை சரியாக உச்சரிக்க மாட்டார்கள். இதற்க்கு காரணம் யார்? தாங்கள் தான், இது தொழிற்துரோகம் மட்டுமன்று, தாய்மொழி துரோகமும் கூட. ரக்சாபந்தன்,கிருஷ்ண ஜெயந்தி, ஹோலி, விநாயகர் சதூர்த்தி,உகாதி போன்ற பண்டிகைகளை கொண்டாடும் தமிழர்களுக்கு சில கேள்விகள், தமிழனின் திருவிழாக்களான பொங்கல்,தைபூசம்,தமிழ் வருடப்பிறப்பு, போன்ற பண்டிகைகளை எந்த ஒரு வேற்று மொழிகாரனாவது கொண்டாடுகிறானா?, உகாதிக்கு (தெலுங்கு வருடபிறப்பு) கொடுக்கும் முக்கியத்துவம் தமிழ் வருடபிறப்புக்கு கொடுப்பதில்லை ஏன்? இவைகளெல்லாம் கீல்தரமானவைகளா?

என்னிடம் சில தமிழர்கள் கேட்ட கேள்விகள், நீங்க விநாயகர் சதூர்த்தி கொண்டாட மாட்டீங்களா? கிருஷன ஜெயந்தி கொண்டாட மாடீன்களா?  இந்த கேள்விகள் எப்படி பட்ட கேள்விகள் தெரியுமா? நீங்க கஞ்சா அடிக்கமாடீன்களா? கஞ்சா அடிகலீனா வாங்க நாங்க அடிக்கறத வந்து பாருங்கன்னு சொல்றமாதிரி இருக்கு. நான் அடுத்தவன் கலாச்சாரத்துல மாட்டிகிட்டேன் நீங்களும் வாங்க வந்து ஐக்கியமாகுங்க சொல்லாம சொல்றது தான் இது.

சில தமிழர்களின் பெயர்கள் (Modern Tamil Names): மோகன்குமார் (என்பெயர் தான்),கேசவ், அகிலேஷ் ராகவ், க்ரிஷான்த்தருன், ரிஸ்வத், கனிஷ்கா, சுவாதிகா ஸ்ரீ, ராகேஷ்,சஞ்சய், தனுஷ், மோனிஷ் ( இவ்ளோ தான்  ஞாபகம் இருக்கு)

எது எப்படியோ இனியாவது உங்கள் தவறுகளுக்கு மூடுவிழா நடத்துங்கள். நடந்ததை மறப்போம், நடக்கப்போவதை சரியாக செய்வோம்.

மானம் கெட்ட தமிழனாய் வாழ்ந்தது போதும்

தமிழை வாழவைப்போம், தமிழனாய் வாழுவோம்.

உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயரை வைக்க இந்த இணைப்பை அழுத்தவும்.

Tamil Baby Names 

Tamil Names

நன்றி .

———————————————-
தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
———————————————-

காஷ்மீரின் சுய நிர்ணய உரிமை – பார்க்க தவறாதே

இது தீவிரவாதம் அல்ல.

தமிழனே கண்டிப்பாக நீ இதை பார்க்க மறுக்காதே. உண்மையை தெரிந்துகொள். இந்தியாவின் ஏமாற்றுத்தனத்தை எடுத்துக்காட்ட இந்த காணொளி மட்டுமே போதாது, ஆனால் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல் இந்த வீடியோ எடுத்துரைக்கும். சுயநிர்ணய உரிமை என்பதனை நீயும் தீவிரவாதம் என்று சொல்லாதே. அவர்களின் போராட்டத்தை கொச்சை படுத்தாதே

காஷ்மீர் சுய நிர்ணய உரிமை – பகுதி 1

காஷ்மீர் சுய நிர்ணய உரிமை – பகுதி 2

நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்

ஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை உணர முடியும்.
அதனால் தமிழர்களாகிய நாம், தமிழிலேயே குழந்தைகளுக்கு பெயரிடுவது சிறந்தது. பிறமொழியாளர்களுடைய பெயர்களை குழந்தைக்கு வைப்பதால் தேசிய இனப் பண்பை அக்குழந்தை, பிறமொழியாளர்களிடம் இழந்துவிடும். பிற மொழியாளர்கள் தமிழகத்தை ஆண்ட காலங்களில் தமிழ்மொழியின்ஊடே பல பிறமொழிச் சொற்களும் பெயர்களும் புகுந்து கொண்டது. சோழர் காலத்திற்குப் பின்பு திட்டமிட்டு தமிழ்நாட்டு ஊர், பெயர்கள் வடமொழியாக்கம் செய்யப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் மூலம் தமிழர் தம் வரலாற்றையும், பண்டைய இலக்கியங்களையும் உணர்ந்ததால் தூய தமிழில் பெயரிடும் வழக்கம் தோன்றியது. தமிழ் சமூகத்தில் உயர் சாதியினர் மத்தியில் மட்டுமே வேற்று மொழியினர் பெயரை வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்த நேரங்களில்கூட, தாழ்த்தப்பட்டோர் என்றுமே தூய தமிழ் பெயர்களையே இன்றுவரை தமக்கு வைத்துக் கொள்வதைக் காணலாம்.
தமிழ் பேராசிரியரான சூரிய நாராயண சாஸ்திரியார், தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என்றும்; சுவாமி வேதாசலனார் – மறைமலையடிகள் என்றும்;சந்தோஷம்-மகிழ்நன் ஆனதும் பெரும் மாற்றத்தை படித்தோரிடம் கொண்டுவந்தது.
தனித்தமிழ்க் கழகம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், தமிழ் சங்கங்கள், புலவர் கல்லூரிகள், திராவிடக் கழகங்கள் மூலம் எண்ணற்றோர் தம்பெயரில் இருந்த வடமொழிப் பெயர்களைத் துறந்தனர். புதிய தமிழ் பெயரைப் பூண்டனர்.

தமிழர்கள் தன்னுணர்வு பெறுவதற்கு கட்டாயம் தமிழ்ப் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதன் மூலமே அதை அடைய இயலும்

ப. சோழநாடன்

ஆண் பிள்ளை பெயர்கள் Tamil Boy Names

 

பெண் பிள்ளை பெயர்கள் Tamil Girl Names

 

அழகிய தமிழ் பெயர்கள் ஆயிரம் ஆயிரம்